சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பயிலரங்கு

பாளையங்கோட்டையில் தேசிய பசுமைப்படை ஆசிரிய ஒருங்கிணைப்பாளர்களுக்கு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பயிலரங்கு நடைபெற்றது.

பாளையங்கோட்டையில் தேசிய பசுமைப்படை ஆசிரிய ஒருங்கிணைப்பாளர்களுக்கு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பயிலரங்கு நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல்துறை சார்பில் பிளாரன்ஸ் சுவான்ஸ் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இப்பயிலரங்குக்கு, பள்ளி முதல்வர் ஜான்சன் தலைமை வகித்தார். பயிலரங்கில், பிளாஸ்டிக் ஒழிப்பின் அவசியம் எனும் தலைப்பில், பாளையங்கோட்டை தூய யோவான் கல்லூரி முன்னாள் முதல்வர் செல்வின் சாமுவேல், பூச்சியியலும் சுற்றுச் சூழலும் எனும் தலைப்பில் பி.எம்.டி. கல்லூரி விலங்கியல் துறை பேராசிரியர் கொம்பையா, மூலிகை மருத்துவம் எனும் தலைப்பில் டாக்டர் மைக்கேல்ஜெயராஜ்  ஆகியோர் பேசினர். தூய யோவான் கல்லூரி முன்னாள் முதல்வர் ஆர்.கே. ஜேக்கப், வள்ளியூர் கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சாதுசுந்தர்சிங், ஆசிரிய ஒருங்கிணைப்பாளர்கள் கோ. கணபதி சுப்பிரமணியன், பாக்கியநாதன், ரகுமான்கனி, பத்மநாபன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். திட்ட ஒருங்கிணைப்பாளர் செல்வின் சாமுவேல் வரவேற்றார். தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் கிங்ஸ்லி சாலமோன் நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com