நெல்லை மாவட்டத்தில் 14இல் அம்மா திட்ட முகாம்

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 16 வட்டங்களிலும் வருகிற வெள்ளிக்கிழமை (செப்.14) அம்மா திட்ட முகாம் நடைபெறவுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 16 வட்டங்களிலும் வருகிற வெள்ளிக்கிழமை (செப்.14) அம்மா திட்ட முகாம் நடைபெறவுள்ளது.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஐந்தாம் கட்ட அம்மா திட்ட முகாம் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 16 வட்டங்களிலும்  வரும் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. அதன்படி திருநெல்வேலி வட்டம் அனந்தகிருஷ்ணாபுரம், ராதாபுரம் வட்டம் செளந்திரபாண்டிபுரம், அம்பாசமுத்திரம் வட்டம் ஆழ்வார்குறிச்சி, நான்குனேரி வட்டம் அரியக்குளம், சேரன்மகாதேவி வட்டம் வடக்கு அரியநாயகிபுரம், பாளையங்கோட்டை வட்டம் கீழத்திருவேங்கடநாதபுரம், மானூர் வட்டம் களக்குடி, சங்கரன்கோவில் வட்டம் வெள்ளாளன்குளம், திருவேங்கடம் வட்டம் அழகாபுரி, செங்கோட்டை வட்டம் பிரானூர், வீரகேரளம்புதூர் வட்டம் ராஜகோபாலபேரி, ஆலங்குளம் வட்டம் மாயமான்குறிச்சி, சிவகிரி வட்டம் தாருகாபுரம், கடையநல்லூர் வட்டம் நகரம், திசையன்விளை வட்டம் முதுமொத்தான்மொழி ஆகிய இடங்களில் முகாம் நடைபெறுகிறது. 
காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் இம் முகாமில் இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோர் உதவித்தொகை மற்றும் நிறுத்தம் செய்யப்பட்ட முதியோர் உதவித்தொகை மறுபரிசீலனை விண்ணப்பம் உள்ளிட்ட சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள்,  உழவர் பாதுகாப்பு அட்டை, நிலத்தாவாக்கள், சாலை வசதி, குடிநீர் வசதி தொடர்பாக மனு அளித்து பொதுமக்கள் பயன்பெறலாம் என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com