பாரதியார் நினைவு நாள்: சிலைக்கு மாலை அணிவிப்பு

பாரதியார் நினைவு நாளையொட்டி திருநெல்வேலி சந்திப்பில் உள்ளஅவரது சிலைக்கு பல்வேறு அமைப்பினரும் செவ்வாய்க்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பாரதியார் நினைவு நாளையொட்டி திருநெல்வேலி சந்திப்பில் உள்ளஅவரது சிலைக்கு பல்வேறு அமைப்பினரும் செவ்வாய்க்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பாரதியார் திருநெல்வேலி மதிதா இந்துக் கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் பயின்ற வகுப்பறை நாற்றங்கால் என்ற பெயரில் பராமரிக்கப்பட்டு வருகிறது. அங்கு மகாகவியை நினைவூட்டும் ஓவியங்கள் உள்ளன. அந்த வகுப்பறையில் மாணவர்-மாணவிகள் கல்வியில் சிறப்படைந்து நாட்டைக் காக்கும் உறுதிமொழியை செவ்வாய்க்கிழமை ஏற்றனர். பின்னர் பாரதியாரின் சிறப்புகள், விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு உத்வேகம் அளித்த பாரதியின் கவிதைகள் குறித்து விளக்கப்பட்டது. பள்ளி நிர்வாகிகள், மாணவர்-மாணவிகள் பலர் கலந்துகொண்டனர். 
பொதிகைத் தமிழ்ச் சங்கம் சார்பில் திருநெல்வேலி சந்திப்பில் உள்ள பாரதியார் சிலைக்கு சங்கத் தலைவர் கவிஞர் பே.ராஜேந்திரன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. சங்க உறுப்பினர்கள் சுப்பையா, கோபால், ஜெயக்குமார், குருநாச்சி, சடகோபன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
காங்கிரஸ், பிராமணர் சங்கம், பாஜக, தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் சார்பிலும் பாரதியார் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. திருநெல்வேலியைச் சேர்ந்த தனியார் பள்ளி மாணவர்-மாணவிகள் பாரதியார் போல வேடமணிந்து வந்து சிலை முன் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com