பாளை.யில் இலக்கிய நூல் அறிமுகக் கூட்டம்

பாளையங்கோட்டையில் தமிழ் இலக்கிய நூல் அறிமுகக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பாளையங்கோட்டையில் தமிழ் இலக்கிய நூல் அறிமுகக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
சாரல் இலக்கிய அமைப்பின் சார்பில் மாவட்ட மைய நூலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, எழுத்தாளர் கிருஷி தலைமை வகித்தார். வத்தலகுண்டு கவிஞர் சக்திஜோதி எழுதிய "சங்கப் பெண் கவிதைகள்' என்ற நூல் குறித்து மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக தமிழ்த்துறைத் தலைவர் அ. ராமசாமி,  பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி பேராசிரியர் ஜிதேந்திரன் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.
நிகழ்ச்சியில், எழுத்தாளர் வண்ணதாசன், கவிஞர் பாப்பாக்குடி இரா. செல்வமணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாவட்டத் தலைவர் இரா. நாறும்பூநாதன் வரவேற்றார். நூலகர் அ. முத்துக்கிருஷ்ணன் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com