திருநெல்வேலி அருகே கடைக்கு சென்ற தனியார் பள்ளி நிர்வாகி மனைவியிடம், 7 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
திருநெல்வேலி அருகே கோடீஸ்வரன் நகரைச் சேர்ந்தவர் வேலாயுதம் (55). இவர், மேலப்பாளையத்தில் தனியார் நர்சரி பள்ளி நடத்தி வருகிறார். இவரது மனைவி தமிழ்ச்செல்வி (50). இவர், வீட்டு அருகே உள்ள கடையில் பொருள்கள் வாங்குவதற்காக நடந்து சென்றாராம். அப்போது, அவ்வழியாக தலைக்கவசம் அணிந்து பைக்கில் வந்த மர்ம நபர்கள் இருவர் தமிழ்ச்செல்வி அணிந்திருந்த 7.5 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிவிட்டனராம்.
புகாரின்பேரில், திருநெல்வேலி நகரம் குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.