தச்சநல்லூரில் பசுமைப் பேரணி

தச்சநல்லூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி சார்பில், தூய்மை மற்றும் பசுமைப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தச்சநல்லூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி சார்பில், தூய்மை மற்றும் பசுமைப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பேரணிக்கு, ஓய்வுபெற்ற வங்கி அலுவலர் சந்திரபாபு தலைமை வகித்தார். நல்லாசிரியர் கிரிஷ் முன்னிலை வகித்தார். கைகழுவுதல், தன்சுத்தம் பேணுதல், கழிப்பறைகளை உபயோகித்தல் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வுப் பதாகைகளை ஏந்தியபடி விழிப்புணர்வு முழக்கத்துடன் மாணவர்கள் பங்கேற்றனர். பள்ளி வளாகத்தில் இருந்து தொடங்கிய பேரணி சந்திமறிச்சம்மன் கோயில் சந்திப்பு உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாகச் சென்று, மீண்டும் பள்ளியை அடைந்தது. இப்பேரணியில் பள்ளித் தலைமையாசிரியை சங்கரேஸ்வரி, எஸ்.ஆர். ராஜலட்சுமி, செ. செந்தில்வடிவு, சீனித்தாய், கனகலட்சுமி, பெற்றோர்-ஆசிரியர் கழகத் தலைவர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com