திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோயிலில் 1008 திருவிளக்கு பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
காமதேனு அறக்கட்டளை சார்பில், உலக நன்மைக்காகவும், மழை வேண்டியும், கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றதையடுத்து, இக்கோயில் ஆயிரங்கால் மண்டபத்தில் 1008 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில், அறக்கட்டளை நிறுவனர் பெ. தெட்சிணாமூர்த்தி, செயலர் கோ. ஆவுடைநாயகம் மற்றும் வெங்கடேஸ்வரய்யா, கோயில் செயல் அலுவலர் பா. ரோஷினி, காவல் ஆய்வாளர் வேல்கனி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.