விபத்தில் காயமடைந்த முதியவர் சாவு

பாளை.யில் விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த முதியவர் சனிக்கிழமை இறந்தார்.

பாளை.யில் விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த முதியவர் சனிக்கிழமை இறந்தார்.
பாளை. அருகேயுள்ள டக்கரம்மாள்புரத்தைச் சேர்ந்தவர் செல்வம் (70). கூலித் தொழிலாளியான இவர், 2 தினங்களுக்கு முன், டக்கரம்மாள்புரத்தில் பிரதான சாலையை கடக்க முயன்றாராம். அப்போது, அவ்வழியாக வந்த மோட்டார் சைக்கிள் செல்வம் மீது மோதியதாம். இதில், பலத்த காயமடைந்த செல்வம் பாளை. அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு, அவர் சனிக்கிழமை இறந்தார். திருநெல்வேலி போக்குவரத்துப் புலனாய்வு பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com