தெருநாய்களை பராமரிப்பு மையத்தில்தான் அடைக்க வேண்டும்! திருத்தம் கோரிய மனுக்கள் தள்ளுபடி! மாவட்டச் செயலர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை!பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு! ஒரே வாரத்தில் 2-வது முறை!ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி தொடரும்: மத்திய பெட்ரோலிய அமைச்சகம்இன்று முதல் செங்கல்பட்டு புறநகா் ரயில்கள் கூடுவாஞ்சேரியுடன் நிறுத்தம்நீலகிரி, கோவை உள்பட 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஐக்கிய அரபு அமீரக அணு சக்தி மையத்துக்கு அருகே ட்ரோன் தாக்குதல்: இந்தியா கவலைநாகா்கோவில்-மும்பை விரைவு ரயில் மாற்றுப்பாதையில் இயக்கம்நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்கர்நாடகம்: நாளைமுதல் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள் - அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது
/

குற்றச்செயலால் பாதிக்கப்பட்ட தருவை பெண்ணுக்கு ரூ.3 லட்சம் நிதி உதவி

தமிழ்நாடு குற்றச் செயலால் பாதிக்கப்பட்டோருக்கான நஷ்ட ஈடு திட்டத்தின்படி பாளை.யை அடுத்த தருவையைச் சேர்ந்த சசிகலாவுக்கு ரூ.3 லட்சம் அளிக்கப்பட்டது.

Updated On :24 ஜனவரி 2019, 2:45 am IST

தமிழ்நாடு குற்றச் செயலால் பாதிக்கப்பட்டோருக்கான நஷ்ட ஈடு திட்டத்தின்படி பாளை.யை அடுத்த தருவையைச் சேர்ந்த சசிகலாவுக்கு ரூ.3 லட்சம் அளிக்கப்பட்டது.
பாளை.யை அடுத்த தருவையைச் சேர்ந்த கூலித்தொழிலாளி தங்கவேலு. இவருக்கு, தனது மகன் இசக்கிபாண்டியை கொலை செய்த வழக்கில் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து அவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீடு செய்தார். இதனை சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்து தண்டனையை உறுதி செய்தது. இதில் பாதிக்கப்பட்ட தங்கவேலுவின் மனைவி சசிகலாவுக்கு தமிழ்நாடு குற்றச்செயலால் பாதிக்கப்பட்டோருக்கான நஷ்ட ஈடு திட்டம்- 2013-இன் படி நஷ்ட ஈடு வழங்க திருநெல்வேலி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவிற்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவின்பேரில் விசாரணை செய்த திருநெல்வேலி மாவட்ட முதன்மை நீதிபதி கே.ராஜசேகர் பாதிக்கப்பட்ட சசிகலாவிற்கு ரூ.3 லட்சம் நஷ்ட ஈடு வழங்க மாவட் ஆட்சியருக்கும், மாவட்ட கண்காணிப்பாளருக்கும் உத்தரவிட்டார். இதையடுத்து, காவல்துறை வழங்கிய ரூ.3 லட்சத்திற்கான காசோலையை சசிகலாவுக்கு மாவட்ட முதன்மை நீதிபதி கே.ராஜசேகர் வழங்கினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.