திருநெல்வேலி
சொக்கம்பட்டி பகவதி அம்மன் கோயிலில் முளைப்பாரி ஊர்வலம்
கடையநல்லூர் அருகே உள்ள சொக்கம்பட்டி அருள்மிகு பகவதி அம்மன் கோயிலில் முளைப்பாரி ஊர்வலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கடையநல்லூர் அருகே உள்ள சொக்கம்பட்டி அருள்மிகு பகவதி அம்மன் கோயிலில் முளைப்பாரி ஊர்வலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் பங்குனித் திருவிழா கடந்த மார்ச் 24ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து நாள்தோறும் சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள், தீபாராதனைகள் நடைபெற்றன. இரவில் சப்பர வீதியுலா நடைபெற்றது.
9ஆம் திருநாளான திங்கள்கிழமை தீர்த்தகுட ஊர்வலம், பால்குட ஊர்வலம் நடைபெற்றது . 10ஆம் திருநாளான செவ்வாய்க்கிழமை முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. இதில் விரதமிருந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை விழாக் குழுவினர் செய்திருந்தனர்.