இலஞ்சி பாரத் மாண்டிசோரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நீட் தேர்வு குறித்த கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு, பள்ளியின் முதன்மை முதல்வர் காந்திமதி தலைமை வகித்தார். மித்ரா நீட் கல்வி கழகத் தலைவர் கோபி கிருஷ்ணா, பங்கேற்றுப் பேசினார். இதையொட்டி நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டத்தில், பெற்றோர், மாணவர்கள், பயிற்சி ஆசிரியர்கள் பங்கேற்றனர். முதல்வர் உஷா ரமேஷ் வரவேற்றார். துணை முதல்வர் பாலசுந்தர் நன்றி கூறினார்.