நெல்லை வியாபாரிகள் முன்னேற்ற பாதுகாப்பு சங்கக் கூட்டம்

நெல்லை வியாபாரிகள் முன்னேற்ற பாதுகாப்பு சங்கத்தின் நிர்வாகக் குழு கூட்டம் திருநெல்வேலி நகரத்தில் அண்மையில் நடைபெற்றது. 

நெல்லை வியாபாரிகள் முன்னேற்ற பாதுகாப்பு சங்கத்தின் நிர்வாகக் குழு கூட்டம் திருநெல்வேலி நகரத்தில் அண்மையில் நடைபெற்றது. 
கூட்டத்துக்கு சங்கத் தலைவர் கே.முகம்மது யூசூப் தலைமை வகித்தார்.   கௌரவ ஆலோசகர் மை.சம்சுதின், துணைச் செயலர் டி.ஜவகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலர் கே.ரவிக்குமார் வரவேற்றார். 
வரும் மே மாதம் 5ஆம் தேதி நடைபெற உள்ள வணிகர் தின மாநாட்டில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும், தேர்தல் நேரங்களில்  வியாபாரிகள் பணம் எடுத்துச் செல்லும் அளவு ரூ.2 லட்சமாக அதிகரிக்க தேர்தல் ஆணையம் ஆவன செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 8 அம்ச தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.   துணைச்செயலர்கள் எம்.எஸ்.கான்முகம்மது, கே.சுப்பையா உள்பட பலர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com