தென்காசி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் தனுஷ் எம். குமாரை ஆதரித்து, சிவகிரியில் செவ்வாய்க்கிழமை இருசக்கர வாகனப் பேரணி மற்றும் பிரசாரம் நடைபெற்றது.
நகரச் செயலர் டாக்டர் செ.சு. செண்பகவிநாயகம் தலைமை வகித்தார். தொகுதி பொறுப்பாளர் சரவணன் முன்னிலை வகித்தார். மாவட்ட வழக்குரைஞரணி புரவலர் எம்.பி.கே. மருதப்பன் தொடங்கிவைத்தார். வாசுதேவநல்லூர் ஒன்றியச் செயலர் பொன். முத்தையாபாண்டியன், தலைமை செயற்குழு உறுப்பினர் யு.எஸ்.டி. சீனிவாசன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர்.