தென்காசி மக்களவைத் தொகுதி அமமுக வேட்பாளர் பொன்னுத்தாய், சுரண்டை பகுதியில் செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்தார்.
சுரண்டை, சுந்தரபாண்டியபுரம், வீராணம், மேலக்கலங்கல், கல்லத்திகுளம், மருக்கலாங்குளம், பலபத்திரராமபுரம், சீவலசமுத்திரம், கங்கணாங்கிணறு ஆகிய கிராமங்களில் அவர் வாக்கு சேகரித்தார்.
அவருடன், மாவட்ட நிர்வாகிகள் மூர்த்தி, வீரபுத்திரன் உள்ளிட்டோர் சென்றனர்.
சாம்பவர்வடகரை பேரூராட்சியில் வேட்பாளர் பொன்னுத்தாயை ஆதரித்து, அமமுகவினர் வீடு, வீடாகச் சென்று வாக்கு சேகரித்தனர்.
பேரூராட்சி முன்னாள் தலைவர் செல்வி மூர்த்தி தலைமையில் பெண்கள் வீடு, வீடாகச் சென்று வாக்கு சேகரித்தனர்.
இதில், மாவட்ட துணைச் செயலர் வி.பி.மூர்த்தி, நகரச் செயலர் காமராஜ், வேல்சாமி, ராமதாஸ், செல்வம், முருகன், சாகுல் ஹமீது உள்பட பலர் கலந்துகொண்டனர்.