செங்கோட்டையில்  வேட்பாளர்கள் தீவிரப் பிரசாரம்

தென்காசி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக, திமுக கூட்டணி வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரித்தனர். 

தென்காசி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக, திமுக கூட்டணி வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரித்தனர். 
அதிமுக கூட்டணியில் போட்டியிடும் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, திங்கள்கிழமை இரவு செங்கோட்டை நகராட்சி பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பிரசாரத்தில், நகரச் செயலர் கிருஷ்ண முரளி என்ற குட்டியப்பா, மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
திமுக: திமுக வேட்பாளரான தனுஷ் எம்.குமார் செவ்வாய்க்கிழமை இறுதிக்கட்ட பிரசாரத்தை செங்கோட்டை நகராட்சி பகுதியில் தொடங்கினார். தொடர்ந்து 24 வார்டுகளிலும் அவர் பிரசாரம் மேற்கொண்டார்.  பிரசாரத்தில், நகரச் செயலர் ரஹீம், வழக்குரைஞர் வெங்கடேசன் மற்றும் கூட்டணிக் கட்சியினர் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com