பாளையங்கோட்டை அருள்மிகு ராமசாமி கோயில் வளாகத்தில் உள்ள தியாக பிரம்ம இன்னிசை மண்டபத்தில், நெல்லை கம்பன் கழகத்தின் 478ஆவது கம்ப ராமாயணத் தொடர் சொற்பொழிவு நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, பே. சங்கரபாண்டியன் தலைமைவகித்தார். அ. முருகேசன் இறைவணக்கம் பாடினார். செம்மைசேர் நாமம் என்ற தலைப்பில் த. சரவணசெல்வம், அயோத்தியா காண்டம் என்ற தலைப்பில் கழகத் தலைவர் பேராசிரியர் சிவ. சத்தியமூர்த்தி ஆகியோர் சொற்பொழிவாற்றினர். முனைவர் பாண்டியன், குத்தாலம், திருஞானசம்பந்தன், லட்சுமணன், வெங்கடாசலபதி, மகராஜன், பேராச்சிமுத்து, சண்முகசுந்தரம், காந்தி, குகநமச்சிவாயம், மீனாட்சிசுந்தரம், சுப்புலட்சுமி, ஐயம்மாள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். மருத்துவப் பேராசிரியர் இளங்கோவன் செல்லப்பா வரவேற்றார்.