கேசவபுரத்தில் கார் மோதி பைக்கில் சென்றவர் சாவு

செங்கோட்டை அருகேயுள்ள கேசவபுரத்தில் கார் மோதியதில் பைக்கில் சென்றவர் சனிக்கிழமை உயிரிழந்தார்.


செங்கோட்டை அருகேயுள்ள கேசவபுரத்தில் கார் மோதியதில் பைக்கில் சென்றவர் சனிக்கிழமை உயிரிழந்தார்.
கேசவபுரத்தைச் சேர்ந்த வெட்டும்பெருமாள் மகன் பாலசுப்பிரமணியன் என்ற முருகன் (60). இவர், புளியரையில் உள்ள தனது டீக்கடைக்கு சனிக்கிழமை பைக்கில் சென்றார். அப்போது, எதிரே வந்த கார், பைக் மீது மோதியதில் பாலசுப்பிரமணியன் பலத்த காயமடைந்தார். செங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட அவர் இறந்தார்.
இதுகுறித்து புளியரை காவல் உதவி ஆய்வாளர் ஷியாம்சுந்தர் வழக்குப் பதிந்து, கார் ஓட்டுநர் முகம்மதுசுதிலை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com