மத்திய அரசின் திறனாய்வுத் தேர்வில் முத்துகிருஷ்ணாபுரம் ரத்னா உயர்நிலைப் பள்ளி மாணவி சந்தனமாரி தேர்ச்சி பெற்றுள்ளார்.
தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை தேர்வில் இப்பள்ளியின் 8ஆம் வகுப்பு மாணவி சந்தனமாரி தேர்ச்சி பெற்றுள்ளார். இவருக்கு 4 ஆண்டுகளுக்கு மத்திய அரசின் கல்வி உதவித்தொகை கிடைக்கும். சிறப்பிடம் பெற்ற மாணவியை பள்ளி நிர்வாகி பிரகாஷ், தலைமையாசிரியை சக்திவடிவு, செயலர்கள் மாடசாமி, ஆறுமுகம் உள்ளிட்டோர் பாராட்டினர்.