காமாட்சி நகர் நலச்சங்க கூட்டம்

பாளையங்கோட்டை கே.டி.சி. நகரில் உள்ள காமாட்சி நகர் நலச் சங்க பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது.

பாளையங்கோட்டை கே.டி.சி. நகரில் உள்ள காமாட்சி நகர் நலச் சங்க பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது.
சங்கத் தலைவர் பொ.வீரபாகு தலைமை வகித்தார். சந்திரசேகரன் தமிழ்த்தாய் வாழ்த்து பாடினார். சங்கரவேலாயுதம் வரவேற்றார். இரா.கிருஷ்ணன், நல்லசிவம் ஆகியோர் அறிக்கை வாசித்தனர். சங்க புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். குடிநீர்த் தட்டுப்பாடு, குப்பைகளால் வரும் சிக்கல்கள், தெருக்களில் சிசிடிவி கேமரா பொருத்துதல் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.  நகரில் சுகாதாரம் பேணும் வகையில் நடவடிக்கை எடுக்க மாநகராட்சி நிர்வாகத்திடம் வலியுறுத்தியும் உரிய நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளதால், மாநகராட்சியைக் கண்டித்து வீடுகளில் கருப்புக் கொடியேற்றுதல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபடுவது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com