தென்காசியில் முறையான அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியது தொடர்பாக, நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த 21பேரை போலீஸார் கைது செய்தனர்.
திருநெல்வேலி மேற்கு மாவட்டம் தென்காசி சட்டப் பேரவைத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இலங்கையில் நிகழ்ந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தைக் கண்டித்தும், தமிழகத்தில் மத்திய அரசின் வேலைவாய்ப்பில் பிற மாநிலத்தவரை அதிகமாக பணியில் சேர்ப்பதை கண்டித்தும், தென்காசி புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு பசும்பொன் தலைமை வகித்தார். காவல் துறை அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியது தொடர்பாக, தென்காசி சட்டப் பேரவைத் தொகுதி பொறுப்பாளர் அழகுபாண்டியன் உள்ளிட்ட 21 பேரை தென்காசி போலீஸார் கைது செய்தனர்.