திருநெல்வேலியில் வெள்ளிக்கிழமை 103 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவானது.
திருநெல்வேலியில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக வெயிலின் தாக்கம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. சில தினங்களுக்கு முன்பு, ஒரு நாள் மட்டும் மழை பெய்தது. மாவட்டத்தில் பல இடங்களில் கோடை மழை பெய்து வரும் நிலையில், திருநெல்வேலியில் மட்டும் வெயிலின் தாக்கம் குறையாமல் காணப்படுகிறது. வெள்ளிக்கிழமை நிலவரப்படி 103 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது. வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதன் காரணமாக, மதிய வேளையில் சாலைகளில் மக்கள் நடமாட்டம் வெகுவாக குறைந்து காணப்படுகிறது.