முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி
கடையம் அருகே முதியவர் தற்கொலை
By DIN | Published On : 04th August 2019 01:33 AM | Last Updated : 04th August 2019 01:33 AM | அ+அ அ- |

கடையம் அருகே முதியவர் தற்கொலை செய்துகொண்டார்.
கடையம் அருகேயுள்ள ஐந்தாம்கட்டளையைச் சேர்ந்தவர் பண்டாரம் (70). கூலித் தொழிலாளியான இவரை வியாழக்கிழமை முதல் காணவில்லையாம். அவர் அருகேயுள்ள விளங்காட்டில் உள்ள மரத்தில் தூக்கிட்ட நிலையில் இறந்துகிடந்து வெள்ளிக்கிழமை தெரியவந்ததாம்.
தகவலின்பேரில் கடையம் போலீஸார் சென்று, சடலத்தைக் கைப்பற்றி தென்காசி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பினர். விசாரணையில், அவர் விஷம் குடித்துவிட்டு, தூக்கிட்டுத் தற்கொலை செய்தது தெரியவந்தது. போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.