முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி
விபத்தில் காயமடைந்த முதியவர் மரணம்
By DIN | Published On : 04th August 2019 12:58 AM | Last Updated : 04th August 2019 12:58 AM | அ+அ அ- |

பாளையங்கோட்டையில் வியாழக்கிழமை நேரிட்ட விபத்தில் காயமடைந்த முதியவர் சனிக்கிழமை இறந்தார்.
திருநெல்வேலி மாவட்டம், விக்கிரமசிங்கபுரத்தைச் சேர்ந்தவர் வீராசாமி (81). ஓய்வுபெற்ற ஆலை ஊழியரான இவர், திருச்செந்தூரில் வசிக்கும் தன் மகளைப் பார்க்க விக்கிரமசிங்கபுரத்திலிருந்து பைக்கில் வியாழக்கிழமை புறப்பட்டாராம். பாளையங்கோட்டை அருகே பைக் மீது ஆட்டோ மோதியதாம். இதில் காயமடைந்த அவரை திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் சனிக்கிழமை இறந்தார். திருநெல்வேலி மாநகர குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.