முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி
1008 பால்குட ஊர்வலம்
By DIN | Published On : 04th August 2019 01:32 AM | Last Updated : 04th August 2019 01:32 AM | அ+அ அ- |

செங்கோட்டை அருகே உள்ள பிரானூர் பார்டர் ஸ்ரீமத் ஜெயவீர ஸர்வசக்தி அபய ஹஸ்த ஆஞ்சநேயர் கோயிலில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு 1008 பால்குட ஊர்வலம் சனிக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, செங்கோட்டை ஓம் ஸ்ரீ சற்குரு ஆறுமுகச்சாமி ஒடுக்கத்தில் இருந்து தேசிய நெடுஞ்சாலை வழியாக 1008 பால்குட ஊர்வலம் கோயிலை வந்தடைந்தது. பின்னர் கோயிலில் உள்ள ஆஞ்சநேயருக்கு பாலாபிஷேகம், சிறப்பு அலங்கார, தீபாராதனை நடைபெற்றது.
பால்குட ஊர்வலத்தில் செங்கோட்டை, இலஞ்சி, தென்காசி சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.