எஸ்.டி.பி.ஐ. கண்டன ஆர்ப்பாட்டம்

 உத்தரப் பிரதேச மாநிலத்தில் 15 வயது சிறுவனை ஜெய்ஸ்ரீராம் சொல்ல வலியுறுத்தி சங்பரிவார் அமைப்பினர் எரித்துக் கொன்றதாகக் கூறி எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் திருநெல்வேலி சந்திப்பில்  கண்டன ஆர்ப்பாட்டம்  நடத்தினர். 

 உத்தரப் பிரதேச மாநிலத்தில் 15 வயது சிறுவனை ஜெய்ஸ்ரீராம் சொல்ல வலியுறுத்தி சங்பரிவார் அமைப்பினர் எரித்துக் கொன்றதாகக் கூறி எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் திருநெல்வேலி சந்திப்பில்  கண்டன ஆர்ப்பாட்டம்  நடத்தினர். 
சிறுவன் கொல்லப்பட்ட விவகாரத்தில் ரயில் மறியல் போராட்டத்துக்கு  எஸ்.டி.பி.ஐ. கட்சி அழைப்பு விடுத்திருந்தது. ஆனால் போலீஸார் அனுமதி மறுத்ததால் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாவட்ட பொதுச் செயலர் பீர்மஸ்தான் தலைமை வகித்தார்.
துணைத் தலைவர் சாகுல் ஹமீது உஸ்மானி, செயலர்கள் ஹயாத் முகம்மது, மஜித், முஸ்தபா, அலாவுதீன், மீராசா, சேக்சாலிக், முபாரக், தொழிற்சங்க மாவட்டச் செயலர் பசீர்லால், மும்தாஜ் ஆலிமா உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர்  கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com