அம்பையில் ஜெபக்கூடம் முற்றுகை

அம்பாசமுத்திரத்தில் அனுமதியின்றி செயல்பட்டதாக ஜெபக்கூடத்தை இந்து முன்னணியினர் ஞாயிற்றுக்கிழமை முற்றுகையிட்டனர்.

அம்பாசமுத்திரத்தில் அனுமதியின்றி செயல்பட்டதாக ஜெபக்கூடத்தை இந்து முன்னணியினர் ஞாயிற்றுக்கிழமை முற்றுகையிட்டனர்.
அம்பாசமுத்திரம் கோடரங்குளம் விலக்குப் பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள இடத்தில் அனுமதியின்றி ஜெபக்கூட்டம் நடைபெற்றதாம். இது குறித்து நகர இந்து முன்னணி சார்பில் அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டதாம். ஆனால், எந்த நடவடிக்கை எடுக்கவில்லையாம். இதையடுத்து, திருநெல்வேலி கிழக்கு மாவட்ட இந்து முன்னணி துணைத் தலைவர் பால்ராஜ், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் மாரியப்பன், அம்பாசமுத்திரம் நகரத் தலைவர் ராமசாமி, ஒன்றியத் தலைவர் எம்.எஸ்.கண்ணன், நகரச் செயலர் சுடலை முத்துக்குமார், ஆட்டோ சங்கத் தலைவர் சக்திவேல் உள்ளிட்டோர் முற்றுகையில் ஈடு"பட்டனர். அவர்களிடம்,  டிஎஸ்பி ஜாஹிர் ஹூசைன், வட்டாட்சியர் வெங்கடேசன் உள்ளிட்டோர்  பேச்சு நடத்தியதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com