கரிவலம்வந்தநல்லூர் அருகே வீடு புகுந்து இளம்பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற இளைஞரைப் போலீஸார் கைது செய்தனர்.
கரிவலம்வந்தநல்லூர் அருகே சத்திரப்பட்டியைச் சேர்ந்த 30 வயது பெண்ணிடம், அவரது பக்கத்து வீட்டைச் சேர்ந்த தமிழ்மணி மகன் செல்வக்குமார் (27) என்பவர் கடந்த இரு தினங்களுக்கு முன் அந்தப் பெண்ணின் கணவர் இல்லாத நேரத்தில் அவரது வீட்டுக்குள் புகுந்து தவறாக நடக்க முயன்றாராம்.
புகாரின்பேரில், கரிவலம்வந்தநல்லூர் போலீஸார் வழக்குப் பதிந்து செல்வக்குமாரை கைது செய்தனர்.