குலவணிகர்புரத்தில் கொடை விழா

பாளையங்கோட்டை குலவணிகர்புரத்தில் மத்திய சிறை எதிரில் உள்ள அருள்மிகு சிவனணைந்த பெருமாள், கொம்பு சுடலை

பாளையங்கோட்டை குலவணிகர்புரத்தில் மத்திய சிறை எதிரில் உள்ள அருள்மிகு சிவனணைந்த பெருமாள், கொம்பு சுடலை மாடசாமி, இசக்கியம்மன் கோயில் கொடை விழா அண்மையில் நடைபெற்றது.
இக்கோயில் கொடை விழாவையொட்டி முதல் நாளில் சுவாமிக்கு மாக்காப்பு, அலங்கார தீபாராதனை, குடியழைப்பு ஆகியவை நடைபெற்றது. மறுகால்தலை, முப்பந்தல் இசக்கியம்மன் கோயில், சங்குமுகம் பகுதிகளில் இருந்து தீர்த்தம் எடுத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
2ஆவது நாள் காலையில் சிவனணைந்த பெருமாள், கொம்பு சுடலை மாடசாமி, இசக்கியம்மன், அங்காளபரமேஸ்வரி, பிரம்மசக்தி, பேச்சியம்மன், கருப்பசாமி, பலவேசக்காரன், பைரவர், முண்டசாமிக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இரவு சாமக்கொடை, மகுடம் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. குலவணிகர்புரம், பாளையங்கோட்டை, வீரமாணிக்கபுரம், ரெட்டியார்பட்டி சுற்றுவட்டார பகுதி மக்கள் விழாவில் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com