பாளை. அருகே தொழிலாளிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக ஒருவர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டார்.
பாளையங்கோட்டை அருகேயுள்ள மேலகுளத்தைச் சேர்ந்தவர் முருகானந்தம்(45). தொழிலாளி. இவருக்கு, திருநெல்வேலி அருகேயுள்ள செட்டிக்குளத்தைச் சேர்ந்த ராஜ்(40) என்பவர் பணம்கேட்டு கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து, அவர் அளித்த புகாரின்பேரில், பாளையங்கோட்டை தாலுகா போலீஸார் வழக்குப்பதிந்து ராஜை கைது செய்தனர்.