பணகுடி பகுதியில் ஆகஸ்ட் 5 மின்தடை

பணகுடி துணை மின் நிலையத்தில்  மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், திங்கள்கிழமை (ஆக.5) மின் விநியோகம் இருக்காது.

பணகுடி துணை மின் நிலையத்தில்  மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், திங்கள்கிழமை (ஆக.5) மின் விநியோகம் இருக்காது.
இது தொடர்பாக வள்ளியூர் செயற்பொறியாளர் எஸ்.ராஜன் ராஜ் வெளியிட்ட  செய்திக் குறிப்பு:  வள்ளியூர் மின்வாரிய கோட்டத்தில் பணகுடி துணை மின் நிலையத்தில் திங்கள்கிழமை (ஆக. 5) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால், அன்றைய தினம் காலை 9 முதல் மாலை 5 மணி வரை பணகுடி, காவல்கிணறு, சிவகாமிபுரம், ரோஸ்மியாபுரம், தளவாய்புரம், தண்டையார்குளம், கும்பிகுளம், மருதப்பபுரம், பாம்பன்குளம், கலந்தபனை, தெற்கு வள்ளியூர், டி.பி.சாலை, நம்பியான்விளை உள்ளிட்ட சுற்று வட்டாரங்களில் மின் விநியோகம் இருக்காது எனத் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com