பணகுடி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், திங்கள்கிழமை (ஆக.5) மின் விநியோகம் இருக்காது.
இது தொடர்பாக வள்ளியூர் செயற்பொறியாளர் எஸ்.ராஜன் ராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: வள்ளியூர் மின்வாரிய கோட்டத்தில் பணகுடி துணை மின் நிலையத்தில் திங்கள்கிழமை (ஆக. 5) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால், அன்றைய தினம் காலை 9 முதல் மாலை 5 மணி வரை பணகுடி, காவல்கிணறு, சிவகாமிபுரம், ரோஸ்மியாபுரம், தளவாய்புரம், தண்டையார்குளம், கும்பிகுளம், மருதப்பபுரம், பாம்பன்குளம், கலந்தபனை, தெற்கு வள்ளியூர், டி.பி.சாலை, நம்பியான்விளை உள்ளிட்ட சுற்று வட்டாரங்களில் மின் விநியோகம் இருக்காது எனத் தெரிவித்துள்ளார்.