பாவூர்சத்திரம் அருகேயுள்ள செல்லத்தாயார்புரம் ஸ்ரீமன்நாராயணசுவாமி நிழல் தாங்கல் திருவிழா வெள்ளிக்கிழமை தொடங்கியது. இதைத் தொடர்ந்து மாலையில் அய்யாவுக்கு திருக்கல்யாணமும், அன்ன தர்மமும் நடைபெற்றன.
சனிக்கிழமை மாலை உகப்படிப்பு, பால்தர்மமும், ஞாயிற்றுக்கிழமை மதியம் உச்சிப்படிப்பு, பால்தர்ம ஆகிஸ நேகமமும் நடைபெற்றன. மாலை 4 மணிக்கு அய்யா இந்திர வாகனத்தில் பவனி வருதலும், இரவு இசை சொற்பொழிவும் நடைபெற்றன. ஏற்பாடுகளை அய்யாவின் அன்பு கொடி மக்கள், அய்யா வைகுண்டர் இளைஞர் அணியினர் செய்திருந்தனர்.