மகாராஜநகரில் மக்கள் போராட்டம்

திருநெல்வேலி மகாராஜநகரில் உழவர் சந்தை வளாகத்தில் உரக்கிடங்கு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருநெல்வேலி மகாராஜநகரில் உழவர் சந்தை வளாகத்தில் உரக்கிடங்கு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் விவசாயிகள் நேரடியாக தங்கள் விளை பொருள்களை மக்களிடம் விற்பனை செய்யும் நோக்கில் உழவர் சந்தைகள் உருவாக்கப்பட்டன.  அதன்படி திருநெல்வேலி மாநரில் மேலப்பாளையம், மகாராஜநகர் உழவர் சந்தைகள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. மகாராஜநகர் உழவர் சந்தையில் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கடைகள் நடத்தி வருகிறார்கள். காய்கனிகள், பழங்கள், கீரை வகைகள் விற்பனையாகின்றன.  மகாராஜநகர், தியாகராஜநகர், பாளையங்கோட்டை சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தினந்தோறும் இங்கு வந்து காய்கனி வாங்கிச் செல்கிறார்கள். இந்நிலையில் இந்த உழவர் சந்தை வளாகத்துக்குள் மாநகராட்சி சார்பில் உரக்கிடங்கு மற்றும் சுகாதார பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உழவர் சந்தை வளாகத்தில் தரையில் அமர்ந்து முழக்கமிட்டனர். பின்னர் இதுகுறித்து மாநகராட்சி உயரதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸாரும், அதிகாரிகளும் உறுதியளித்ததைத் தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com