ரேஷன் அரிசி கடத்த முயற்சி: ஒருவர் கைது
By DIN | Published On : 09th August 2019 07:57 AM | Last Updated : 09th August 2019 07:57 AM | அ+அ அ- |

கடையம் அருகே கேரளத்துக்கு கடத்தப்பட இருந்த 1,050 கிலோ ரேஷன் அரிசியை போலீஸார் பறிமுதல் செய்து, ஒருவரை கைது செய்தனர்.
கடையம் அருகேயுள்ள அணைந்தபெருமாள் நாடானூர் பகுதியிலிருந்து கேரளத்துக்கு ரேஷன் அரிசி கடத்தப்பட இருப்பதாகக் கிடைத்த தகவலின்பேரில் கடையம் காவல் ஆய்வாளர் ஆதிலட்சுமி, போலீஸார் புதன்கிழமை இரவு அப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள தோட்டத்தில் சோதனையிட்டபோது ரேஷன் அரிசியும், அதைக் கடத்துவதற்காக சுமை ஆட்டோவும் இருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி, கேரள மாநிலம் திருவில்லார் பகுதியைச் சேர்ந்த தங்கச்சன் மகன் சிபிமேத்யு (47) என்பவரைக் கைது செய்து, 21 மூட்டைகளிலிருந்த 1,050 கிலோ ரேஷன் அரிசியைப் பறிமுதல் செய்தனர்.