எல்ஐசி முகவர்கள் வாயிற்கூட்டம்

எல்.ஐ.சி. பங்குகளை பங்கு சந்தையில் வெளியிடும் முன்மொழிவை வாபஸ் பெற கோரி எல்ஐசி

எல்.ஐ.சி. பங்குகளை பங்கு சந்தையில் வெளியிடும் முன்மொழிவை வாபஸ் பெற கோரி எல்ஐசி முகவர்கள் சங்கத்தினர் (லிக்காய்) பாளையங்கோட்டை எல்ஐசி கோட்ட அலுவலகம் முன்பு வாயிற் கூட்டம் நடத்தினர்.
கூட்டத்துக்கு சங்க கிளைத் தலைவர் சி.டி.எம்.ராஜன் தலைமை வகித்தார்.  லிக்காய் கோட்ட பொதுச்செயலர் எஸ்.குழந்தைவேலு, கோட்ட தலைமை நிலையச் செயலர் பாலசுப்பிரமணியன், கிளைச் செயலர் என்.பி.சுரேசன் பாபு ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.
கூட்டத்தில், சங்க நிர்வாகிகள் கணபதி, சண்முகவேல், முத்தையா தாஸ், சிவகுமார்,  சண்முகவேல், இசைசெல்வி, தங்கராஜ் உள்பட சங்க உறுப்பினர்கள் பலர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com