திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர்-காந்திமதியம்மன் கோயிலில் சுமங்கலி பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சேவாபாரதி அமைப்பின் சார்பில் 6 ஆவது ஆண்டாக இக்கோயிலில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் நடைபெற்ற சுமங்கலி பூஜையில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர். குடும்பத்தில் அனைவருக்கும் ஆரோக்கியமும், வளமும், சீரான மழையும் பெய்ய வேண்டி சிறப்பு வழிபாடு நடத்தினர்.
சேவாபாரதி மாவட்ட துணைத் தலைவர் நிதீஷ்முருகன், நிர்வாகிகள் ஆதிமூலம், சுப்பிரமணியன், துணைத் தலைவர் ஜெகன், செயலர் வள்ளிநாயகம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.