கல்லூரி பேராசிரியர் வீட்டில் ரூ. 2 லட்சம் நகை, பணம் திருட்டு

பாளையங்கோட்டை அருகே கல்லூரி பேராசிரியர் வீட்டில் சுமார் ரூ. 2 லட்சம் மதிப்பிலான நகை, பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

பாளையங்கோட்டை அருகே கல்லூரி பேராசிரியர் வீட்டில் சுமார் ரூ. 2 லட்சம் மதிப்பிலான நகை, பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
பாளையங்கோட்டை அருகே உள்ள விஎம் சத்திரம் சீனிவாசநகரைச் சேர்ந்தவர் ஐசக்நியூட்டன் (45). இவர் பாளையங்கோட்டையில் உள்ள கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் செவ்வாய்க்கிழமை காலையில் குடும்பத்துடன் உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டு மாலையில் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்ததாம். உள்ளே சென்று பார்த்தபோது, வீட்டில் இருந்த 6.5 பவுன் நகை, வெள்ளி, ரூ.5 ஆயிரம் ரொக்கம் திருடு போனது தெரியவந்ததாம். இதன் மதிப்பு சுமார் ரூ. 2 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. தகவலறிந்து வந்த பெருமாள்புரம் போலீஸார் ஆய்வு செய்தனர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. மேலும் இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com