கொள்ளையரை விரட்டிய தம்பதிக்கு எஸ்.பி. பாராட்டு

கடையத்தில் கொள்ளையர்களை தைரியமாக எதிர்கொண்டு அடித்து விரட்டிய தம்பதியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டினார்.

கடையத்தில் கொள்ளையர்களை தைரியமாக எதிர்கொண்டு அடித்து விரட்டிய தம்பதியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டினார்.
கடையம் கல்யாணிபுரத்தைச் சேர்ந்த சண்முகவேலுவின் பண்ணைத் தோட்டத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு ஆயுதங்களுடன் புகுந்த முகமூடிக் கொள்ளையர்களை சண்முகவேலு, அவரது மனைவி செந்தாமரை ஆகியோர் துணிச்சலுடன் போராடி விரட்டியடித்தனர். அவரது வீட்டு கண்காணிப்பு கேமராவில் பதிவான இந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தத் தம்பதியை ஹிந்தி நடிகர் அமிதாப்பச்சன் உள்ளிட்ட பிரபலங்களும் சமூக வலைதளங்களில் பாராட்டியுள்ளனர்.  இந்நிலையில், திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண்சக்தி குமார் செவ்வாய்க்கிழமை காலை சண்முகவேலு வீட்டுக்குச் சென்று ஆய்வு நடத்தினார். அப்போது, சண்முகவேலு, செந்தாமரை தம்பதியைப் பார்த்து, உங்கள் துணிவும், துரிதமான செயல்பாடும் அனைவருக்கும் வேண்டும். நீங்கள் இந்த நிகழ்வின் மூலம் பலருக்கும் முன்னுதாரணமாக உள்ளீர்கள் என்று பாராட்டினார்.
ஆய்வின்போது கடையம் காவல் ஆய்வாளர் ஆதிலட்சுமி மற்றும் போலீஸார் உடனிருந்தனர். கொள்ளையர்களைப் பிடிக்க டி.எஸ்.பி. ஜாகீர் உசைன் தலைமையில் 3 தனிப் படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com