ஆலங்குளம் உள்கோட்ட காவல்துறை சார்பில் குழந்தைகள் மீதான வன்முறை ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணி சுரண்டையில் நடைபெற்றது.
சுரண்டை அழகுபார்வதி அம்மன் கோயில் திடலில் இருந்து பேரணியை ஆலங்குளம் காவல் துணை கண்காணிப்பாளர் சுபாஷினி தொடங்கிவைத்தார். பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று சுரண்டை தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி முன்பு நிறைவடைந்தது. பேரணியில் சுரண்டை எஸ்.ஆர்.ஸ்கூல் எக்ஸலன்ஸ் பள்ளி மாணவிகள் கலந்து கொண்டு பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தி சென்றனர். முன்னதாக சுரண்டை காவல் ஆய்வாளர் மாரீஸ்வரி, குழந்தைகளுக்கு எதிரான வன்முறை குறித்து பள்ளி மாணவிகளுக்கு விளக்கினார்.