இந்தியாவில் முதல் முதலில் பொது நூலக சட்டம் தமிழகத்தில் உருவாக்கப்பட்டதில் பெரும் பங்கு வகித்த பெருமைக்குரிய சீர்காழி ராமாமிர்த ரங்கநாதனின் 127-ஆவது பிறந்த நாள் விழா நூலகர் தினமாக மாவட்ட மைய நூலகத்தில் கொண்டாடப்பட்டது.
ரங்கநாதனின் உருவப்படத்துக்கு மாவட்ட நூலக அலுவலர் இரா.வயலட், மாலை அணிவித்து நூலகர் தின உரை நிகழ்த்தினார். நூலகர் முத்துக்கிருஷ்ணன், நூலக இயக்கத்திற்கு ரங்கநாதன் ஆற்றிய பணிகளை நினைவுகூர்ந்தார்.
அம்பாசமுத்திரம் பேராசிரியர் ஹனீப், சமுதாய மாற்றத்திற்கு நூலகர்கள் ஆற்ற வேண்டிய பணிகளை எடுத்து கூறினார்.நூலகர்கள் கண்ணுபிள்ளை, முத்துலெட்சுமி, ராஜேஸ்வரி, ஜெயமங்கலம், சுசீலா, மாரியப்பன், சீனிவாசன், முத்துராமன், கண்காணிப்பாளர் சங்கரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.