விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பான ஆலோசனைக் கூட்டம் செங்கோட்டையில் புதன்கிழமை நடைபெற்றது.
செங்கோட்டை காவல் நிலையத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்துக்கு, காவல் ஆய்வாளர் சுரேஷ் குமார் தலைமை வகித்தார். கூட்டத்தில், விநாயகர் சதுர்த்தி விழாவை எந்தவித அசம்பாவிதங்களுக்கும் இடமின்றி அமைதியாகவும், பாதுகாப்பாகவும் கொண்டாடுவதற்கு பொதுமக்கள் காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டன. கூட்டத்தில், அனைத்து சமுதாயத் தலைவர்கள், நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.