திருநெல்வேலி மாவட்டத்தில் 17 மையங்களில் இரண்டாம் நிலை காவலர்களுக்கான எழுத்துத் தேர்வு ஞாயிற்றுக்கிழமை (ஆக. 25) நடைபெறுகிறது. இந்தத் தேர்வை 21,896 பேர் எழுதுகிறார்கள்.
இது தொடர்பாக மாவட்ட கண்காணிப்பாளர் அருண்சக்திகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில் ஒருங்கிணைந்த இரண்டாம் நிலைக் காவலர்களுக்கான எழுத்து தேர்வு திருநெல்வேலி மாவட்டத்தில் 17 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. இத்தேர்வை 21,896 பேர் எழுதுகிறார்கள். இதற்கான தேர்வு மையங்களின் விவரம் (விண்ணப்பதாரர்களின் எண் அடைப்புக்குறிக்குள்):
ஆண் விண்ணப்பதாரர்கள்: திருநெல்வேலி அண்ணா பல்கலைக்கழக பிராந்திய வளாகத்தில் 800 பேரும் (3000001 - 3000800), வி.கே.புரம் அகஸ்தியர்பட்டி கேம்பிரிட்ஜ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 1000 பேரும் (3000801 - 3001800), வண்ணார்பேட்டை பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரியில் 1500 பேரும் (3001801 - 3003300), திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரியில் 1000 பேரும் (3003301 - 3004300), பிரான்சேரி பிஎஸ்என் பொறியியல் கல்லூரியில் 4000 பேரும் (3004301 - 3008300), பாளை. தியாகராஜநகர் புஷ்பலதா வித்யா மந்திர் பள்ளியில் 1000 பேரும் (3008301 - 3009300) தேர்வு எழுதுகிறார்கள்.
பாளை. ரோஸ்மேரி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் 1200 பேரும் (3009301 - 3010500), வி.எம்.சத்திரம் ரோஸ்மேரி பள்ளியில்1200 பேரும் (3010501 - 3011700) , புளியங்குடி எஸ்.வி.நகர் வீராசாமி செட்டியார் பொறியியல் கல்லூரியில் 2000 பேரும் (3011701 - 3013700), பாளை. பெருமாள்புரம் சாராள் தக்கர் கல்லூரியில் 2000 பேரும் (3013701 - 3015700), சேரன்மகாதேவி ஸ்காட் கல்லூரியில் 1000 பேரும் (3015701 - 3016700), தாழையூத்து சங்கர்நகர் ஸ்ரீஜெயந்திர சரஸ்வதி சுவாமிகள் கோல்டன் ஜூப்ளி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் 1000 பேரும் (3016701 - 3017700), பாளை.தூய யோவான் மேல்நிலைப்பள்ளியில் 772 பேரும் (3017701 - 3018472) தேர்வெழுதுகிறார்கள்.
பெண் விண்ணப்பதாரர்கள்: சீதபற்பநல்லூர் ஐன்ஸ்டீன் கலைக் கல்லூரியில் 500 பேரும் (8000001 - 8000500), சீதபற்பநல்லூர் ஐன்ஸ்டீன் பொறியியல் கல்லூரியில் 1000 பேரும் (8000501 - 8001500), பழையபேட்டை ராணி அண்ணா கல்லூரியில் 1000 பேரும் (8001501 - 8002500), ஆலங்குளம் சர்தார் ராஜா பொறியியல் கல்லூரியில் 924 பேரும் (8002501 - 8003424)தேர்வு எழுதுகிறார்கள். இவர்களுக்கான அழைப்புக் கடிதம் , அரசால் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை, தேர்வு எழுதும் அட்டை, ஊதா அல்லது கருமை நிற பந்து முனை பேனா ஆகியவற்றை மட்டுமே தேர்வறைக்குள் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுவர். செல்லிடப்பேசி, மின்னணு சாதனங்கள் கொண்டுசெல்லக் கூடாது எனக் கூறப்பட்டுள்ளது.