அம்பை கூட்டுறவு விற்பனை சங்கத் தலைவர் பதவி பறிப்பு

அம்பாசமுத்திரம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத் தலைவர் மீது நிர்வாகக்குழு

அம்பாசமுத்திரம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத் தலைவர் மீது நிர்வாகக்குழு உறுப்பினர்கள் கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் நிறைவேறியதையடுத்து தலைவர் பதவி முடிவுற்றதாக அறிவிக்கப்பட்டது.
அம்பாசமுத்திரம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கம் தலைவர், துணைத் தலைவர், 9 நிர்வாகக் குழு உறுப்பினர்களுடன் செயல்பட்டு வந்தது. ஒரு நிர்வாகக் குழுஉறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்ததையடுத்து 8 உறுப்பினர்கள் குழுவில் இடம்பெற்றிருந்தனர். இந்நிலையில், துணைத் தலைவர், 8 உறுப்பினர்கள் தலைவர் மீது நம்பிக்கை இல்லை என்று கூட்டுறவுத் துணைப் பதிவாளருக்கு மனு அளித்தனர்.
இதையடுத்து வியாழக்கிழமை சிறப்புக் கூட்டம் நடத்தப்படுவதாக சேரன்மகாதேவி கூட்டுறவு சார்பதிவாளர் அறிவித்தார். அதன்படி, சேரன்மகாதேவிசார்பதிவாளர் சந்தனராஜ் தலைமையில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் தலைவர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. தீர்மானத்துக்கு ஆதரவாக 8 உறுப்பினர்கள் கருத்துத் தெரிவித்தனர். தலைவர் வேலுசாமி, ஒரு உறுப்பினர் தீர்மானத்துக்கு எதிராக கருத்துத் தெரிவித்தனர். இதையடுத்து, நம்பிக்கையில்லா  தீர்மானம் வெற்றி பெற்றதாகவும், தலைவர் பதவி முடிவுற்றதாகவும் கூட்டுறவு சார்பதிவாளர் அறிவித்தார். மேலும், புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை தலைவர் பொறுப்பை துணைத் தலைவர் கவனித்துக் கொள்வார் என்றும் தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com