அண்ணா பிறந்தநாள் விழாவையொட்டி, திமுக நெல்லை மேற்கு மாவட்ட இலக்கிய அணி சார்பில், சங்கரன்கோவிலில் பாரதிதாசன் பாடல்கள் ஒப்பித்தல் போட்டி சனிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு நெல்லை மேற்கு மாவட்ட திமுக இலக்கிய அணி அமைப்பாளர் கோ. சுப்பையா தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் சிவபத்மநாதன், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ச. தங்கவேலு, திமுக செயற்குழு உறுப்பினர் அன்புமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இலக்கிய அணி மாவட்டத் தலைவர் சுப்பையாபாண்டியன், துணைச் செயலர் கோமதிநாயகம், பொருளாளர் கனல்ராஜா, வெ. முனியசாமி, பரமகுரு, கோட்டைச்சாமி, மாவட்ட பிரதிநிதி செய்யதுஇப்ராஹிம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பாரதிதாசன் பாடல் ஒப்பித்தல் போட்டியில் சங்கரன்கோவில், கடையநல்லூர், தென்காசி உள்ளிட்ட பல்வேறு நகரங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் சுமார் 500 பேர் பங்கேற்றனர்.