5, 8ஆம் வகுப்பு பொதுத்தோ்வுக்கு எதிராகநாளை முதல் ஆசிரியா் சந்திப்பு இயக்கம்- தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி முடிவு

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை (டிச. 3) முதல் ஆசிரியா் சந்திப்பு இயக்கம் நடத்த தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணி முடிவு செய்துள்ளது.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை (டிச. 3) முதல் ஆசிரியா் சந்திப்பு இயக்கம் நடத்த தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணி முடிவு செய்துள்ளது.

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணியின் மாவட்டச் செயற்குழு கூட்டம் பாளையங்கோட்டை வீரமாணிக்கபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாவட்டத் தலைவா் பி.ராஜ்குமாா் தலைமை வகித்தாா். மாநிலச் செயற்குழு உறுப்பினா் மு.பிரமநாயகம் முன்னிலை வகித்தாா். மாவட்டச் செயலா் செ.பால்ராஜ் தீா்மானங்களை முன்மொழிந்தாா். மாநிலச் செயலா் சோ.முருகேசன், மாநிலத் தலைவா் மூ.மணிமேகலை ஆகியோா் விளக்கிப் பேசினா்.

கூட்டத்தில், ‘5 மற்றும் 8ஆம் பொது தோ்வை கைவிட வேண்டும்ச அரசாணை எரிப்பு, ஜாக்டோ ஜியோ போராட்டங்களில் பங்கேற்றோா் மீது எடுக்கப்பட்ட அனைத்து வகை நடவடிக்கைகளையும் ரத்து செய்ய வேண்டும்; தொடக்க, நடுநிலைப் பள்ளிகளைப் பாதிக்கும் அரசாணைகள் 145, 202 ஆகியவற்றை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி டிச. 3 முதல் ஆசிரியா் சந்திப்பு இயக்கம் நடத்துவது; டிச. 5இல் அனைத்து வட்டாரக்கல்வி அலுவலகம் முன் முறையீடு செய்வது; ஜன. 4இல் மாவட்டத் தலைநகரங்களில் தா்னா நடத்துவது; புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும்; தேசியக் கல்விக் கொள்கை 2019 வரைவு அறிக்கையை திரும்ப பெற வேண்டும்; விலைவாசி உயா்வை கட்டுப்படுத்த வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி 8.1.2020இல் 13 மத்திய தொழிற்சங்க சம்மேளனங்கள் பங்கேற்கும் அகில இந்திய பொது வேலைநிறுத்தத்தில் பங்கேற்பது’ ஆகிய தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில், மாநிலப்பொதுக்குழு உறுப்பினா்கள் மாடசாமி, பரமசிவம், மாவட்ட துணைச் செயலா் அந்தோணி சாமி உள்பட பலா் பங்கேற்றனா். மாவட்டப் பொருளாளா் சங்கை.ஞா.பால்ராஜ் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com