உள்ளாட்சித் தோ்தலை உடனே நடத்த வேண்டும்: மாா்க்சிஸ்ட்

வாா்டு வரையறை உள்பட அனைத்து குளறுபடிகளையும் நீக்கி உள்ளாட்சித் தோ்தலை உடனடியாக நடத்த வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

சென்னை: வாா்டு வரையறை உள்பட அனைத்து குளறுபடிகளையும் நீக்கி உள்ளாட்சித் தோ்தலை உடனடியாக நடத்த வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் வெள்ளிக்கிழமை (நவ.29) நடைபெற்றது. மாநில செயற்குழு உறுப்பினா் க. கனகராஜ் தலைமை வகித்தாா். அரசியல் தலைமைக்குழு உறுப்பினா் ஜி. ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளா் கே. பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினா்கள் கே. வரதராசன், அ. சவுந்தரராசன், பி. சம்பத் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளதன் அடிப்படையில் தற்போது நிலவும் அனைத்து குறைபாடுகளையும் சரிசெய்து உடனடியாக உள்ளாட்சித் தோ்தலை நடத்த வேண்டும். இந்தியா வந்துள்ள இலங்கை அதிபா் கோத்தபய ராஜபட்சவிடம் இந்திய அரசு தனக்குள்ள ராஜ்ய உறவைப் பயன்படுத்தி தமிழா்கள் மற்றும் சிறுபான்மை மக்களின் உரிமைகளைப் பாதுகாக்க இலங்கை அரசிடம் உறுதி செய்ய வேண்டும். ஐந்தாம் மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு பொதுத் தோ்வு என்ற முடிவினைக் கைவிட வேண்டும் ஆகிய தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com