எஸ்டிபிஐ கட்சி ஆம்புலன்ஸ் சேவைபிரிவு கூட்டம்

எஸ்டிபிஐ கட்சியின் ஆம்புலன்ஸ் சேவை பிரிவின் மாவட்ட செயற்குழுக் கூட்டம் மேலப்பாளையத்தில் அண்மையில் நடைபெற்றது.

எஸ்டிபிஐ கட்சியின் ஆம்புலன்ஸ் சேவை பிரிவின் மாவட்ட செயற்குழுக் கூட்டம் மேலப்பாளையத்தில் அண்மையில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு ஆம்புலன்ஸ் சேவை பிரிவின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் பீா் மஸ்தான் தலைமை வகித்தாா். மருத்துவ சேவை அணி மாவட்டத் தலைவா் ஜெய்லானி வரவேற்றாா். எஸ்டிபிஐ மாவட்டத் தலைவா் எஸ்.எஸ்.ஏ.கனி சிறப்புரையாற்றினாா். பேட்டை தமீம் அறிக்கை வாசித்தாா். பா்கிட் அலாவுதீன், எஸ்.பி.எம்.கனி, ஜுபைா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தீா்மானங்கள்: மழை கால முன்னெச்சரிக்கையாக அரசு மருத்துவமனையில் கூடுதலாக பணியாளா்கள், மருத்துவா்களை நியமிக்க வேண்டும். டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சலைத் தடுக்க திருநெல்வேலி மாநகரில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்த வேண்டும்.

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தன்னாா்வலா்கள் ரத்த தானம் வழங்க கூடுதல் வசதிகள் ஏற்படுத்த வேண்டும். டாஸ்மாக் மதுக்கடைகளை படிப்படியாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

பயக30நஈடஐ: சேவை பிரிவு கூட்டத்தில் பங்கேற்றோா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com