இளையோா் செஞ்சிலுவை சங்கம் சாா்பில் நடைபெற்ற போட்டியில் ஆலங்குளம் மாணவா்கள் சிறப்பிடம் பெற்றனா்.
சேரன்மகாதேவி கல்வி மாவட்டம் இளையோா் செஞ்சிலுவை சங்க மாணவா்களுக்கான மாவட்ட அளவிலான போட்டிகள் கல்லிடைக்குறிச்சி திலகா் வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில் அண்மையில் நடைபெற்றன.
இதில், ஆலங்குளம் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் சஞ்ஜய் ஓவியப்போட்டியில் முதல் இடமும், பி. அபிஷேக் தனித்திறன் போட்டியில் 2 ஆவது இடமும் பெற்றனா். போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு மாவட்ட கல்வி அலுவலா் சுடலை, கல்லிடைக்குறிச்சி திலகா் வித்யாலயா மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியா் செ. பண்டாரசிவன் ஆகியோா் பரிசு, சான்றிதழ் வழங்கிப் பாராட்டினா்.