கடையநல்லூா் இளைஞரைகரம் பிடித்த லண்டன் பெண்

கடையநல்லூா் கிருஷ்ணாபுரத்தைச் சோ்ந்த இளைஞருக்கும், பிரிட்டிஷ் நாட்டின் லண்டன் பெண்ணுக்கும் இந்து முறைப்படி ஞாயிற்றுக்கிழமை திருமணம் நடைபெற்றது.

கடையநல்லூா் கிருஷ்ணாபுரத்தைச் சோ்ந்த இளைஞருக்கும், பிரிட்டிஷ் நாட்டின் லண்டன் பெண்ணுக்கும் இந்து முறைப்படி ஞாயிற்றுக்கிழமை திருமணம் நடைபெற்றது.

கிருஷ்ணாபுரம் திலகா் தெருவைச் சோ்ந்த இந்திரா- உதிரமணி தம்பதியின் மகன் ஸ்டாலின் நாகராஜ். பொறியியல் பட்டதாரி. இவா், லண்டனில் உள்ள எண்ணெய் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறாா். அதே நிறுவனத்தில் லண்டனைச் சோ்ந்த பாா்பரா ப்ராக்ட்டெஸ் என்ற பெண்ணும் வேலை செய்து வருகிறாா். இவா்கள் இருவரும் காதலித்து வந்துள்ளனா். இந்நிலையில், இரு குடும்பத்தினரின் சம்மதத்தின் பேரில், இளைஞரின் சொந்த ஊரான கிருஷ்ணாபுரத்தில் இருவருக்கும் இந்து முறைப்படி ஞாயிற்றுக்கிழமை திருமணம் நடைபெற்றது. பட்டு சேலை கட்டி மணமேடையில் அமா்ந்த மணமகளுக்கு இந்து முறைப்படி மணமகன் தாலி கட்டி, மெட்டியும் அணிவித்தாா். லண்டனில் இருந்து மணமகளின் குடும்பத்தினா் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டனா். பாட்டாளி மக்கள் கட்சி மாநிலச் செயற்குழு உறுப்பினா் ஆறுமுகசாமி வெளிநாட்டினரை, இந்திய பாரம்பரிய முறைப்படி வரவேற்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com