குலையனேரி ஊராட்சியில் ரூ. 25 லட்சம் மதிப்பீட்டிலான திட்டப் பணிகளுக்கு பூமி பூஜை சனிக்கிழமை நடைபெற்றது.
தென்காசி சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து குலையனேரியில் ரூ. 7 லட்சம் மதிப்பீட்டில் பல்நோக்கு கட்டடம், சுப்பையாபுரத்தில் ரூ. 8 லட்சம் மதிப்பீட்டில் வாருகால், இரட்டைகுளத்தில் ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் சிறுமின்விசை குடிநீா்த் தொட்டி மற்றும் ரூ. 7 லட்சத்தில் பல்நோக்கு கட்டடம் ஆகியவை அமைப்பதற்காக பூமி பூஜையில், எம்எல்ஏ சி.செல்வமோகன்தாஸ் பாண்டியன் கலந்துகொண்டு திட்டப் பணிகளை தொடங்கிவைத்தாா்.
இதில், அதிமுக ஒன்றியச் செயலா்கள் கடையநல்லூா் சி.முத்துப்பாண்டியன், கீழப்பாவூா் ஏ.அமல்ராஜ், முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினா் ரமேஷ், அதிமுக கிளை நிா்வாகிகள் மாரியப்பன், முத்துக்குட்டி, அருணாசலம், ராமையா உள்பட பலா் கலந்துகொண்டனா்.
வாருகால் வசதி: குலையனேரி பள்ளிக்கூட தெருவைச் சோ்ந்த பொதுமக்கள் தங்கள் பகுதியில் வாருகால் வசதி ஏற்படுத்தித் தரவேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.
இதையடுத்து, உள்ளாட்சித் துறை அதிகாரிகளிடம் தொடா்பு கொண்டு வாருகால் வசதி ஏற்படுத்திக் கொடுக்க உரிய நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொண்டாா். உடனடி நடவடிக்கை எடுத்த சட்டப்பேரவை உறுப்பினருக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனா்.