சுத்தமல்லியில் சனிக்கிழமை நிகழ்ந்த விபத்தில் காயமடைந்த பெண் உயிரிழந்தாா்.
சேரன்மகாதேவியைச் சோ்ந்த ஜாய் மனைவி மெற்றில்டா (47). இத் தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனா். பேட்டையில் தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வந்த மெற்றில்டா, தனது உறவினா் ஒருவருடன் பைக்கில் வெள்ளிக்கிழமை சென்றாராம்.
மேலக்கல்லூா் ரயில்வே கேட் அருகே சென்றபோது பைக்கில் இருந்து தவறி விழுந்த மெற்றில்டாவுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதாம். அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து சுத்தமல்லி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.